தி.மு.க.,வில் அ.தி.மு.க.,வினர் உறுப்பினரை 2 கோடியாக்க இலக்கு
தி.மு.க.,வில் அ.தி.மு.க.,வினர் உறுப்பினரை 2 கோடியாக்க இலக்கு
தி.மு.க.,வில், புதிய உறுப்பினர் சேர்க்கையின் போது, அ.தி.மு.க.,வினரையும் சேர்க்க வேண்டும் என்றும், மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை, இரண்டு கோடியாக உயர்த்த வேண்டும் என்றும், அக்கட்சியினருக்கு, தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.
Imageதி.மு.க.,வில், 15வது உட்கட்சி தேர்தலுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தி.மு.க., வரலாற்றில், முதல் முறையாக, அக்கட்சி தலைவர், கருணாநிதியின் ஆலோசனை இல்லாமல் நடக்கும் உட்கட்சி தேர்தல் இது. அதனால், வன்முறை இன்றி, கோஷ்டி பூசல் வெடிக்காமல், தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
வியூகம்
கட்சியில் அமைப்பு ரீதியாக, ஒரு லட்சத்து, 11 ஆயிரத்து, 140 வார்டுகள் உள்ளன. அதில், தற்போது, 1.10 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.புதிய உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித் தல் பணியை, சமீபத்தில், கருணாநிதி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்; நவ., 15ல், உறுப்பினர் சேர்க்கை பணிகள் nextcolumn முடிவடைகின்றன. பின், அட்டவணை வெளியிடப் பட்டு, தேர்தல்
பணிகள் முடுக்கி விடப்படும். கட்சிக்கு, புது ரத்தம் பாய்ச்சும் வகையில்,
புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில், ஸ்டாலின் தலைமையில் வியூகம்
அமைக்கப்பட்டு உள்ளது.
அதாவது, தமிழக அரசியலில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அசாதாரண சூழ்நிலை உருவாகி உள்ளது. முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி, தீபா அணி என, மூன்று அணிகளாக
பிரிந்துள்ளது.அதனால், மக்கள் செல்வாக்கு உடைய தலைவரை அடையாளம் காண முடியாமல், அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என, ஆளுமை நிறைந்த தலைவர்களை மட்டுமே ஏற்றுக் கொண்டவர்கள், அ.தி.மு.க., தொண்டர்கள். எனவே, அவர்களிடம் உருவாகியுள்ள குழப்பத்தை பயன்படுத்த, தி.மு.க., மேலிடம் திட்டமிடுகிறது.வாய்ப்பு
இதையடுத்து, 'அ.தி.மு.க., தொண்டர்களை குறிவைத்து, அவர்களின் குடும்ப உறுப்பினர்களை யும் வளைத்து, தி.மு.க.,வில் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என, மாவட்ட செயலர்களுக்கு, தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.
அ.தி.மு.க.,வில் உள்ள கிளை, பேரூர், ஒன்றியம், நகரம், மாவட்டநிர்வாகிகளை யும், 'மாஜி' நிர்வாகி களையும், தி.மு.க.,வினர் நேரில் சந்தித்து
பேச வேண்டும்.'அடுத்த ஆட்சி, தி.மு.க., தலைமையில் உருவாகும்.
அப்போது
உங்களுக்கு, உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு தரப்படும்' என்ற வாக்குறுதிகளை வழங்கி,
nextcolumn அ.தி.மு.க., வினரை இழுக்கும் முயற்சிகளில், தி.மு.க.,வினர் ஈடுபட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு ஒன்றியத் திற்கு, தலா, 10 ஆயிரம் உறுப்பினர் என, மாவட்டத்திற்கு குறைந்த பட்சம், இரண்டு லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் வகையில், ஒட்டுமொத்தமாக, தி.மு.க., உறுப்பினர்களின் எண்ணிக்கை, இரண்டு கோடியாக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இதன் வாயிலாக, அதிக உறுப்பினர்கள் உள்ள கட்சி என்ற பெயரை கைப்பற்றவும், அக்கட்சி விரும்புகிறது. புதிய உறுப்பினர் படிவத்தில், 25 பேர் சேர்க்கப்படு கின்றனர். ஒரு உறுப்பினர் கார்டுக்கு, 20 ரூபாய் கட்டணம்.
சென்னை, விழுப்புரம், கோவை, திருச்சி, திருநெல்வேலி மேற்கு, திருச்சி, வேலுார், கடலுார் போன்ற மாவட்டங்களில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில், மாவட்ட நிர்வாகி கள் ஈடுபட்டு வருகின்றனர் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.- நமது நிருபர் -
Topics :
Advertisement
Advertisement
சுடலை இருக்கும் வரை மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியம் இல்லை. ஊழல் கரை படிந்த மஞ்சள் துண்டு கும்பல் ஒழிந்தால் தான் கட்சிக்கு விமோச்சனம். இளைஞர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள்.
என்ன பண்ணினாலும் கண்டிப்பாக திமுக & அதன் கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது, இது மக்களின் முடிவு மற்றும் அல்ல, ஆண்டவனால் எழுத்து வைத்தது, ஒன்றும் செய்ய முடியாது...
இரண்டு குட்டையும் ஒன்றும் புனித குளங்களோ... ஆறுகளோ இல்லை... எல்லாம் சாக்கடைகள்...லஞ்சம் லாவண்யம், அநீதி,.பிறன் பொருள் அபகரித்தல். மரியாதை என்றால் எள்ளளவும் தெரியாத கேடுகெட்ட ஜென்மங்கள்...
64 கார்போரேட் நிறுவனங்கள் வைத்து இருக்கும் குடும்ப கட்சிக்கு ஆதரவு கொடுக்க தமிழன் தயங்க மாட்டான்...
சுடலை இருக்கும் வரை மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியம் இல்லை. ஊழல் கரை படிந்த மஞ்சள் துண்டு கும்பல் ஒழிந்தால் தான் கட்சிக்கு விமோச்சனம். இளைஞர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள்.
என்ன பண்ணினாலும் கண்டிப்பாக திமுக & அதன் கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது, இது மக்களின் முடிவு மற்றும் அல்ல, ஆண்டவனால் எழுத்து வைத்தது, ஒன்றும் செய்ய முடியாது...
இரண்டு குட்டையும் ஒன்றும் புனித குளங்களோ... ஆறுகளோ இல்லை... எல்லாம் சாக்கடைகள்...லஞ்சம் லாவண்யம், அநீதி,.பிறன் பொருள் அபகரித்தல். மரியாதை என்றால் எள்ளளவும் தெரியாத கேடுகெட்ட ஜென்மங்கள்...
64 கார்போரேட் நிறுவனங்கள் வைத்து இருக்கும் குடும்ப கட்சிக்கு ஆதரவு கொடுக்க தமிழன் தயங்க மாட்டான்...
Advertisement